வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பாரம்




நடக்க முடியாத தூரம்
பேசும்போதே மூச்சிரைத்த
பெரிய மனிதனை
ஏற்றிக் கொண்டேன்

எனக்குப் பாரமாய்
நடுத்தெருவில் அவன்.

இழுத்துப் போனபின்
இறங்கும் போது
இரண்டு ரூபாயில் இளைத்துப் போனான்.

பாரம்
இடம் மாறி
என் நெஞ்சில்.