ஞாயிறு, 26 ஜனவரி, 2020

அறிமுகம்





’சார் யாரு?’

அப்பாவின் நெஞ்சு வலி சொல்லி, உன்
அவசரச் செலவுக்கு
ஆயிரம் கடனாய்க் கேட்டு,
அழாத குறையாய்க்
கையேந்தி நின்றபோது ஒன்று;

நான் கேட்டபோது
இல்லையென்று வாய் பொய்சொல்ல
முகம் காட்டிக்கொடுத்து விடாதபடி
மூடிக்கொண்ட மற்றொன்று;

பள்ளியில்
பையனைச் சேர்க்க
உதவமறுத்து,
உதாசீனப்படுத்தியது இன்னொன்று;

என்று
உன் மூடிமுகங்களை யன்றி
உன்னை அறியாமலேயே…..

’இவர் சோமசுந்தரம். பள்ளி ஆசிரியர்.
என் நெருங்கிய நன்பர்.’

மனித நேயம்.  மார்ச் 2005.