வியாழன், 3 ஆகஸ்ட், 2017

மனிதனை..



சுருட்டுக் கரைகிற வரையில்
நேசித்துவிட்டுப் பின்
செருப்புக் காலால் தேய்க்கிற
மனிதனை..

இருட்டை விரட்ட
ஏற்றிவைத்து அனுபவித்துவிட்டு
வெளிச்சம் வந்ததும் வேண்டாமென்று
ஊதி அணைக்கிற
மனிதனை..

தன்
வயிற்றை நிரப்ப வாங்கி வந்தவை
வேகும் வரையில் அதன்
பசியைப் போக்கி, வளர்த்து
வெந்தபின்
உணவு மறுத்து அழித்துவிட்டுத்
தான் உண்கிற
மனிதனை..

சாகும் வரையில் காத்திருந்து
ருசித்துச் சாப்பிடும்
சிதையில்
நெருப்பு.


சதங்கை- தீபாவளி மலர் நவ.1974







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக