சனி, 5 ஆகஸ்ட், 2017

தோட்டம்



அந்த மயானத்தில்
ஆரவாரமின்றி
அரச மரியாதையின்றி
ஊர்வலம், ஊதல், ஒதல் எதுவுமின்றி
அநாதைகளாய்
அடக்கம் செய்யப்பட்ட
விதைகளின் சமாதிகளில்
நட்டுவைத்த சிலுவைகளாய்
நிற்கும் செடிகள்
நினைவுச் சின்னங்கள்.

விமரிசனம். இலக்கியத் தொகுப்பு. விடியல் வெளியீடு. ஜூலை 1975

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக