திங்கள், 14 ஆகஸ்ட், 2017

வறட்சி



தொலைவில்
பகையை எட்டிய பூமி
தன் அசுரக் கரங்களின்
கூரிய விரல்களால் குத்திக் கிழிக்கும்.
குருதி தோயக் குலைந்து நகரும்
வானம்.

வெற்றியைக் காண விரைந்து போனால்
தடித்த நரம்புகளோடும்
முறுக்கேறிய தசைகளோடும்
அசுரக் கரங்கள் மறைய
அம்மண மரங்கள் நிற்கும்.

தோற்றுப் போய்
வாயைப் பிளந்துகொண்டு
மரித்துக் கிடக்கும்
கீழே
பூமி.


சதங்கை - தீபாவளி மலர். நவம்பர் 1975

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக