புதன், 23 ஆகஸ்ட், 2017

உள்ளூர்ப் பயணம்



வழக்கம் போலக்
கூட்டம்.
நின்று கொண்டே
சென்னை சென்று
கண்ணனைச் சந்தித்து,

பள்ளிச் சிறுமியாய்ப் பழகிய
மாலாவைக்
குழாய்நீர்க் குடத்தொடு
கோவிலில் பார்த்துப்
புன்னகைத்து.

மாலையில்
கடற்கரையில்
அம்பியுடன் அமர்ந்து
அரட்டை அடித்துவிட்டு,

படித்துரை நிறுத்தத்தில்
பழகிய கால்கள்
இறங்க,
அவசரமாய்
மதுரை திரும்பும்
மனம்.


சதங்கை ஆக. 1976

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக