செவ்வாய், 12 செப்டம்பர், 2017

கட்டிடத் தொழிலாளர்கள்


இவர்கள்....
பரிணமிக்கிற பங்களாக்களின்
பின்னணியில்
பரிதாபத்திற்குரியவர்கள்.

கல்லும் மண்ணும்
சவாரி செய்யும்
கால்நடை வண்டிகள்.

வறுமை தோண்டுகிற
வயிற்றுப் பள்ளங்களை
உழைப்பால் நிரப்ப
தினம் முயன்று
தோற்றுப் போகிற என்
தோழர்கள்.

புகைப்படக் கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது.

தினமணி கதிர். 21.8.1983.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக