வெள்ளி, 7 மே, 2021

முதிர்வு முன்வந்து நின்றபோது

 


 

ஈரத் தளத்தில்

பாவி நடக்கப்

பயங் கொள்ளும் பாதங்கள்.

 

படி கண்டு தயங்கி,

மடித்து

ஏற மறுக்கும் கால்கள்.

 

விளக்கு அணைத்ததும்

வீடு பூட்டியதும்

உறுதிப்படுத்திக் கொண்டதும் மறந்து,

மறந்து விட்டோமோ என்று

பல சமயங்களில்

பதைபதைக்கும் மனது.

 

காலச்சுழலில் நழுவிய  இளமையைக்

கண்ணாடியில் தேடும் முகம்.

 

கருமை தொலைத்த

தலைமுடி தோன்றி’

முதுமை காட்டி நகைக்கும்..

 

Tamilauthors.com Minnithazh Sep. 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக