செவ்வாய், 19 மே, 2026

எண்ணமே ஏற்றம்

 

சிந்தை ஆசையோடு கூடி முயங்கியதில்/

எண்ணங்கள், வெறும் பிண்டங்களாய்ப் பிறந்தன./

சேர்த்து வளர்த்தெடுக்க முயற்சி முன்வந்தது./

ஆசையின் தூண்டலால், ஏற்றிவிடும் ஏணியாய்/

உழைப்பும் உவப்புடன் துணை நின்றதால்,/

தடைகளைக் கடந்து பிண்டநிலை மாறி, /

எண்ணம், செயலாகி எழிலுடன்/

எழுந்து நின்று, ஏற்றம் பெற்றது.


அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக