செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

காற்றில்...



ஓடையில்
நிழலிறங்கி நீராட
முடித்துக் கரையேறி
முடியுலர்த்தும்
மரங்கள்.

நனைந்த
துணியுலர்த்தும்
செடிகள்
கிளைக் கையால்
ஈரம் காய.

வளைந்து
கரைப் புற்கள்
கற்களோடு
காதல் பேசும்
காற்றில்.

தீபம். ஜனவரி 1980.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக