ஞாயிறு, 10 டிசம்பர், 2017

சேரியில் குடியரசு தினம்


உயரே ஏற்றிய
புதுக்கொடி
காற்றில் பறந்தது.

தலைவரோ
மாலையுடன் 
காரில் பறந்தார்.

ஓட்டளித்து அவரை
உயரே ஏற்றிய 
அவர்கள் மட்டும்
நிலையாய்
அரையில்
அழுக்குக் கந்தலோடு
கீழே.

(1984)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக