வெள்ளி, 29 டிசம்பர், 2017

என் அறைத் தோழர்கள்



வயதாகி
வேண்டும் போதன்றி
வேறு போதுகளில்
ஞானியாய் வாய்மூடி
மௌனித்திருக்கும் பீரோ -.

இயல்பாய்த்
திறந்த வாய் மூடாத
காலி அலமாரி –

அடிக்கடி ஆட்டம் காட்டி
அச்சுறுத்தும் மேஜை –

அமரும் போது
தரையில்
விழத்தள்ளி
விலகிச் சிரிக்கும் நாற்காலி –

காலம் கரைவதைக் காட்டி
தினம் என் வேலையில்
வேகம் கூட்டும் கடிகாரம் –

இவை என்
அறைத் தோழர்கள்.


தீபம். ஏப்ரல் – மே 1986.

மதுரைக் கல்லூரி (தன்னாட்சி)- இளங்கலை பாடப்பகுதி- தற்காலக் கவிதைகள். 1994-95. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக