வெள்ளி, 8 மார்ச், 2019

ஜடாயு

படித்தும் படைத்தும்
முளைத்தன சிறகுகள்.
பதவியும் பெருமையும் என்று
வீசிப்பறந்து
உயரச்சென்று உலவச் செய்தன.

சிந்தனை சிலிர்த்துச் சிதறிய,
இதயம் நுகர்ந்த
இனிய பொழுதுகளை
வலிமையுடன்
கவர்ந்து போனது
விரைந்து பறந்த காலம்.

இன்று
நரையும் திரையும்
பாரமாய்ச்
சிறகுகளில் இறங்கிச் சிதைக்க,
பார்த்தும் கேட்டும்
மகிழ்ந்த புலன்கள்
மயங்கின.
நினைவு மங்கியது.
முனகல் இருக்கும்
மூச்சு உள்ளவரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக