வியாழன், 24 ஏப்ரல், 2025

அவசரம்

 


கட்டிக் கொண்டவன்

கவலையற்று

வெட்டியாய்க்

கள்ளுக் கடையில் காலந்தள்ள,

விட்டுச்செல்ல வழியின்றி

வேலைக்குப் போகும் போதும்

கட்டுத் துணியுடன்

முதுகில் குழந்தை.

 

கை பிடித்து நடக்கவே

இன்னும்

காலம் உண்டு.

காற்செருப்புக்கு அவசரம் ஏன்?

 

அப்பனைப் போல் ஆகிவிடாமல்

ஆகாத காலத்துக்கு,

எனக்கு

அரை வயிற்றுக்கேனும் கஞ்சி ஊற்ற

உழைத்துச் சம்பாதிக்க

உருப்படியாய் வளரவேணும்

அவசரமாய் ....

 

வல்லமை மின்னிதழ் புகைப்படத்துக்கான கவிதை 16.6.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக